என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தோழி மரணம்"
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் செட்டிக்களம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார்கள். இவர்களது மகள் ஜெயஸ்ரீ(வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
ஒதியம்பட்டை சேர்ந்த ஜெயஸ்ரீயின் தோழி லதா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தோழி இறந்தது முதல் அவர் நினைவாகவே ஜெயஸ்ரீ இருந்து வந்தார். இந்த நிலையில் தோழி இறந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி நேற்று அவரது உருவ படத்துக்கு ஜெயஸ்ரீ மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதுமுதல் ஜெயஸ்ரீ சோகமானார்.
இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளையில் வீட்டின் கூரையில் துப்பட்டாவால் ஜெயஸ்ரீ தூக்குபோட்டு தொங்கினார். எதேச்சையாக அருகில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்த போது ஜெயஸ்ரீ தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்